அறிவு எனும் ஆயிதம் கொண்டு
ஆணவம் இல்லா வழியினிலே
இழிவு என்றும் ஏற்படாமல்
ஈரம் கொண்ட நெஞ்சினராய்
உள்ளம் எனும் கோயிலையே
ஊன்றுகோலாய் எண்ணில் கொண்டு
எட்டு மேலே எட்டு வைத்து
ஏற்றம் மிகுந்த வாழ்க்கைக்கு
ஐந்து விரலையும் சேர்த்திடு
ஒற்றுமை என்றும் காத்திடு
ஓங்கி உலகில் வாழ்த்திட
ஔவை மொழியை பற்றிடு
அக்தே வாழ்க்கை பாதையாகும்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment